சிந்தனை துளிகள்

* பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் தன் அழகை வெளிப்படுத்துகிறாள்.

* நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்.

* பணமும் நிம்மதியும் பிறவிப்பகைவர்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது அரிது.

* அழகு என்பது சக்தி புன்னகை என்பது அதன் கத்தி.

* உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.

* தன்னை அறிவது அறிவு,தன்னை மறப்பது மடமை.

* ஆழ்ந்த அன்பிலேயே உண்மையான இன்பம் மலர்கிறது.

* நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.

* சிறப்பு என்பது ஆற்றலைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது.

* நம்பிக்கை நல்ல வழி காட்டும் – ஆனால் சந்தேகம் சங்கடமே தரும்.

எழுதியவர் : செல்வமணி (4-Jan-16, 12:48 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : sinthanai thulikal
பார்வை : 356

மேலே