ஏண்டி நீ மலரா பூவா

ஏண்டி நீ மலரா பூவா?

நா மலருமில்ல பூவுமில்ல. ஏண்டி நீ என்னோட வகுப்பு தோழியா இருந்துட்டு எம் பேரு கூடத் தெரியாம இருக்கிறயே. எம் பேரு புஷ்பா-ங்கறது மறந்து போச்சா?

இல்லடி உம் பேர மறக்காம இருக்கறதால உன்ன நீ பூவா மலரா-ன்னு கேட்டேன்.

அத எதுக்குக் கேட்ட?

அடியே மண்டு, புஷ்பா-ங்கறது சமஸ்கிருதப் பேரு. அதுக்கு மலர், பூ -ன்னலாம் அர்த்தம். இது கூடத் தெரியமா இருபது வருஷமா வாழ்ந்திட்டே.

எனக்கென்னடி தெரியும். என்ன ஈன்ற எந் தாய் தந்தை தீவிர சினிமா ரசிகர்கள். அவுங்க சினிமா வெறில எனக்கு அந்தப் பேர வச்சுட்டாங்க. எம் பேர உசுசரிக்க முடியாத பாட்டி என்ன 'புசுப்பா, புசுப்பா " ன்னு கூப்பிடறாங்க மலர் - ங்கற அழகான தமிழ்ப் பேரு இருக்கும் போது எனக்கு புஷ்பாவும் வேண்டாம் புசுப்பாவும் வேண்டாம்.

மலர் உன்னோட மாற்றம் பாராட்டத் தக்கது. வாழ்க.

நன்றிடீடி


.

எழுதியவர் : மலர் (10-Jan-16, 1:26 am)
பார்வை : 176

சிறந்த நகைச்சுவைகள்

மேலே