நானும் ஐ லவ் யூதான்

ஒரு அழகிய ஆண் தினமும் அந்த பேருந்து நிலையத்தில் நின்றிருப்பான்.

அங்கே தினமும் வரும் கல்லூரி மாணவி அவனது அழகில் மயங்கினாள்,

அவனிடம் ஒருநாள் திடீரென சொன்னாள் " என் மனம் என்னிடமே இல்லை, உங்களை காதலிக்கத் தூண்டுகிறது, ஐலவ் யூ" என்று.

அப்போது அவன் சொன்னான் " இது உனக்கு காதலிக்க ஏற்ற வயது அல்ல, நீ நன்றாகப் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் " என்று கூறிவிட்டு அவளது கைகளில் ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்தான்

" இதில் நீ வாழ்வில் வெற்றி பெருவதற்கான சில வாக்கியஙகளை எழுதியிருக்கிறேன், வீட்டில்ல் சென்று படித்து பயன்பெறு" என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

துயரம் தாங்காமல் அழதுகொண்டே சென்ற அவள் வீட்டில் வைத்து அவன் கொடுத்த கடிதத்தை படித்தாள்

அதில் எழுதியிருந்தது

" உனக்கு கண்ணு என்ன குருடா, என் பின்னால பச்சைக்கலர் புடவைகட்டியிருந்தது என் பொண்டாட்டி,

மத்தபடி நானும் ஐ லவ் யூதான்" !

எழுதியவர் : செல்வமணி (11-Jan-16, 8:32 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 373

மேலே