பாட்டி வைத்தியம் - 3

1) உருளைக்கிழங்கு சாற்றை தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் மற்றும் இரப்பைக்கோளாறுகள் நீங்கும்.

2) அவலில் கலோரிகள் அதிகம் காணப்படுகிறது. மேலும் கார்போஹைட்ரேட், புரதம், சர்க்கரை, ஃபைபர், சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை காணப்படுகிறது. பித்தத்தை குறைக்கும். வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவை குணமாகும். சோர்வை குறைத்து உடலுக்கு வலிமை தரும். அதிகப்படியான எடையை குறைக்கும்.

3) உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

4) உளுந்தில் புரதம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து ஆகியவை காணப்படுகிறது. குறைந்த அளவு கொழுப்பு காணப்படுகிறது. மேலும் வைட்டமின் “சி” நிறைந்துள்ளது. உடல் சதை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. நீரிழிவை கட்டுப்படுத்த உதவும். வாத கோளாறுகளை கட்டுப்படுத்தும்

5) மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் வேர்க்குரு, வாதம் மற்றும் வயிற்று கிருமிகள் குறையும். இது ஒரு கிருமி நாசினியாக உள்ளது.

6) அரைக்கீரையில் தாதுக்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் மஞ்சள் காமாலை, புண்கள், வயிற்றுப்போக்கு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.

7) அரைக்கீரை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு பாதிப்பு குறையும். ஜலதோஷம், உடல் சூடு, சளி, சுரம், இருமல், பித்தம் ஆகியவற்றை குறைக்கும்.

8) வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (16-Jan-16, 10:51 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 244

மேலே