அழகு
இயல்பிலேயே
அழகு
இந்திய மண்ணிலே தான்.!
பூக்கள் அரும்புகள்
பூந்தளிர்கள்
குழந்தைகளை பாருங்கள்..!
யாமறிந்த அழகுணர்ச்சியிலே
இந்தியாவில் கண்டது போல்
இத்தனை அதிகமாய்
இவ்வளவு நேர்த்தியாய்
வேறெங்கும் காண முடியுமா?
இங்கே சிவப்பாய் இருப்பவர்களை விட
கருப்பாய் இருப்பவர்களில் தான்
அழகும் ரசனையும் கொஞ்சம் அதிகம்..!
என்றொரு கருத்து நீங்கள்
கொண்டால் அது பொய்யாகுமா..?