அம்மாவின் மடியே

அம்மாவின் மடியே!

அரியணை ஒன்றில்
அமர சொன்னார்கள்!

அரியணை என்பதே
முள்கிரிடமப்பா ?

அதெல்லாம் வேண்டாமே
அறுதியிட்டு மறுத்தேன்!

அம்மா கேட்டாள்
அரியணை ஏன் ஏற்கவில்லை
என்றே…..
அம்மாவின் ”மடியே”
அரியணையிலும்
அற்புதமானது அதனாலே
அரியணை வேண்டாமென்றேன்
அன்பாக சொன்னேன்!

அம்மாவின் முகத்திலோ…
ஆயிரமாயிரம் கோடுகள்!
அத்தனையுமே…..
சந்தோஷ கோடுகளே!


---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (26-Jan-16, 8:30 pm)
Tanglish : ammaavin madiye
பார்வை : 485

மேலே