சுட்ட அந்த சொல்
சுட்ட அந்த சொல்
சுகமான சுமை
என நெகிழ்ந்தேன்!
கருவறையில்
”என் பிள்ளை”
வளருகையில்!
வளர்ந்த பின்னோ
”சுமை” யென
சொல்லால்
சுட்டான்!
மருமகளின்
கருவறையில்
வளர்ந்து வரும்
பிள்ளைக்கு
”கேட்க கூடாதே!”
சொல்லால்
சுட்ட அந்த சொல்!
----- கே. அசோகன்.