முத்தம் பல

பூமொட்டுள் மகரந்தம்
பூவையின் கூந்தலுக்காய்
பூத்திட முனைகிறது

ஆலாய்ப் பறந்து வண்டு
அமிர்தம் எனும் தேனை
அருந்தத் துடிக்கிறது

செழிப்புடன் மொட்டாகி
செவ்விதழால் ரோஜாவாய்
செடியிலோர் வண்ணமாய் ரோஜா

ரோஜாவோ வண்ணமயம்
ராஜாத்தி சூட எண்ணம்
ராஜ்ஜியமோ அதன் அழகில்

மயங்குது கிறங்குது மனங்கள்
மன்மதச் சிவப்பில் மங்கையர் மனம்
மலரா இது மதுவா/

முட்செடியில் ரோஜாவாய்
முற்றத்தில் மலரும் இது
முத்தம் பல பெற்றிடும்

கள்ளுண்டு கனிவுண்டு
கன்னிகளைக் கவர்ந்து வரும்
கொள்ளை தரும் அழகாலே

ரோஜா ஒரு ராஜாத்தி
ரோந்து வரும் மனங்களில்
ராணி என வீற்றிருப்பாள்

எழுதியவர் : பாத்திமாமலர் (6-Feb-16, 12:51 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 104

மேலே