இறைவன்
அது இது எது
அவன் இவன் எவன்
அவர் இவர் எவர்
என்றெலாம் தேடுவார் இறைவனை
என்றும் நம்மோடு நம்முள்ளே
உறையும் அணுவாம் நம் ஜீவனை
இயககும் விந்தையே இறைவன்
என்பதை என்று உணர்வோமோ
அன்றே தெளிவோம் காண்போம்
அந்த மறையோனை
சத் சித் ஆனந்த மாயனை
அவன் தாள் பற்றுவோம் போற்றுவோம்