காதலர் தினம் 2

காதலர் தினம் (2)
=========================================ருத்ரா இ.பரமசிவன்

எங்கிருந்தோ நெளியும்
மின்னல் காதலில்
இந்த அழகிய உடல்கள்
யாழ் மீட்டுகின்றன.
பெண்ணின் கண்ணில்
கோடி ஒளிக்கடல்.
ஆணின் தாபம்
மானசீகமாய்
அவன் தோளில்
உட்கார்ந்து கேட்கும்
அந்த குருவிக்குத் தெரியும்.
நரம்புகள் இற்றுத்தெறிக்கும் வரை
வரம்பு கடந்த ராகப்பிழம்பில்
ஒன்றிப்போயின உள்ளங்கள்!
உடல்கள் கரைந்தன ஆவியாய்.
இன்பம் அங்கே
கண்ணுக்குத்தெரியாத
ஒரு மெழுகு வர்த்தியின் உருகலாய்
இருளும் ஒளியும் விரவிய‌
கருப்பு வெள்ளை லாவாவில்
கனல் ஆறு பாயும்.
=======================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (7-Feb-16, 2:09 pm)
பார்வை : 295

மேலே