என்னைவிட்டு பிரியாத உன் நினைவுகள் 555
கண்மணியே...
நீயும் நானும் கைகோர்த்து
நடந்த சாலை ஓரங்கள்...
சில நேரங்களில் நீ என்னோடு
ஊடல் கொண்டு...
நீ சாலையோர செடிகொடிகளை
தழுவி சென்றது...
ஒருவரை ஒருவர் பார்வையாலே
பரிமாறிக்கொண்டு...
இடைவெளிவிட்டு அமர்ந்திருந்த
கோவில் மண்டபம்...
உன் பொன்விரல்களால் என்
நெற்றியில் நீ இட்ட திருநீர்...
உன் விரல்பட்ட திருநீற்றின் மணம்
இன்னும் என் நாசியில்...
நீ கோபம்கொண்டு உன் கையில்
இருந்த கைக்குட்டையை எறிந்தாய்...
உன் வேர்வையின் மணம் இன்னும்
போகவில்லையடி கைகுட்டையில்...
என்னைவிட்டு பிரியாத
உன் நினைவுகளை போல...
உன் கைக்குட்டையில்
உன் வியர்வை மணம்...
வாழும் என் ஜீவன்
உன்னையென்னி...
நிச்சயம் ஒருநாள் நீ என்னை
நினைப்பாய் என்றுதான்.....