தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து17---ப்ரியா

கீதுவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது விஜய் மேலயும் கோவம் வந்தது பொது இடம் என்பதால் வெளியில் வைத்து எதுவும் கேட்க முடியவில்லை எல்லாம் வீட்டில் போய் பேசிக்கொள்ளலாம் என்ற முடிவுடன் சென்றனர் இருவரும்.....போகும் போதே விஜய் சில கண்டிஷன்ஸ் போட்டான் கீதுவுக்கு அதாவது வந்தனாவிடம் எப்படி பேச வேண்டும் என்று சொல்லி கொடுத்தான்....!

வீட்டிற்கு வரும் போது ரியா மட்டும் உட்கார்ந்திருந்தாள், வந்தனா எங்கே என்று ஆவேசமானாள் கீது..."ஏய் என்னடி கூல்" என்று விஜய் சொல்ல......ஏன்டி உனக்கு என்ன ஆச்சி இவ்வளவு கோவமாய் இருக்கிறாய் என்று ரியா கேட்டாள்?

ஒன்றுமில்லை அவள் எங்கே என்றாள் மறுபடியும்.....

கோவிலுக்கு போனாள் இப்போ வந்திடுவாள் என்றதும் அவள் வரட்டும் வந்த பிறகு பேசலாம் நீ திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டியா? ரெடியா இரு என்றாள் கீது....!

வந்தனாவின் நம்பருக்கு அழைப்பைக்கொடுத்தாள் பிசி பிசி......என்று வந்து கொண்டிருந்தது கோவத்தில் செல்லை தூக்கி போட்டுவிட்டு உட்கார்ந்திருந்தாள்.....!

சிறிது நேரத்தில் வந்தனா வந்தாள்.

வந்தனாவை ஏற இறங்க பார்த்தவள்.....உன் டயரில இருந்தது வசந்த் போட்டோ தானே என்று கேட்டாள்....?

அவளது பதிலுக்காய் காத்துக்கொண்டிருந்தான் விஜய்......ஆனால் ரியாவுக்கு எதுவும் புரியவில்லை??

திரு திருவென முழித்த வந்தனா ஆ...........ஆமா, என்று பதிலளித்தாள்....!

உன்ன லவ் பண்ணி ஏமாற்றினவன் வசந்த் தானே என்று மறுபடியும் அழுத்தமாய் கேட்டாள் கீது.

ஆமா....ஆமா.....ஆமா......என்று ஆக்ரோஷமாக கத்தினாள் வந்தனா.

பார்த்திங்களா அவன்தான் வசந்த் நீங்க சொல்றது வேற ஆள்........ எங்களையும் குழப்பி நீங்களும் குழம்பாதிங்க லூசுமாதிரி என்று விஜயை கடிந்து கொண்டாள் கீது.

விஜய்க்கு எதுவும் புரியவில்லை தலையை பிய்த்துக்கொண்டான்......... லவ் பண்ணினவன் வசந்த் என்கிறாள்......அப்போ பிரதீக்கோட போட்டோ எப்டி அவகிட்ட வந்திச்சி ஏதோ நடக்குது.......என்றவன்......இப்போது என்ன செய்வது யோசித்தவனுக்கு ஒரு முடிவு கிடைத்தது.

நேரே ரியாவிடம் சென்றான் நீங்க "வசந்த்&வாசுதேவ்" நிறுவனத்துல தானே வேலை பார்க்கீங்க என்றான்?

ஆமா என்றாள் ரியா.

மறுபடியும் வந்தனாவிடம் வந்தான் ரியா வேலை பார்க்கிற நிறுவன முதலாளி வசந்த தானே நீங்க லவ் பண்ணுனீங்க என்று கேட்டான்?

ஆமா அந்த வசந்த் தான் என்று பதிலளித்தாள் வந்தனா.

ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டான் விஜய்..?????

சரி!சரி இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் வாங்க கிளம்பலாம் என்று அவனை இழுத்தாள் கீது...!

குழம்பியபடி யோசனையில்.........நீ ரெடி ஆகு நான் இப்போ வாரேன் என்று வெளியில் தன் நண்பனை பார்க்க கிளம்பினான்....!

வந்தனாவை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் குழப்பம்தான்......!

சரியாக 6மணிக்கு கொஞ்சம் தெளிவு பெற்றவனாய் வந்தான் விஜய்..ஆனால் இப்போது விஜயை பார்த்ததும் வந்தனா குழப்பமடைந்தாள்.....??

அவனது பார்வையில் 1000 கேள்விகள் இருப்பதை வந்தனா உணர்ந்தாள் ஆனால் கண்டுக்காதது போல் இருந்தாள்.
இவனும் எதையும் கேட்கவில்லை நான்குபேரும் கிளம்பி கீதுவின் ஊருக்கு சென்றனர்.

கீதுவின் தோழிகளை பார்த்ததும் அவள் குடும்பம் மிகுந்த சந்தோஷத்துடன் அன்பாய் வரவேற்றனர்..........கீதுவின் தோழிகள் மீது இவர்கள் மொத்த குடும்பமுமே இவ்வளவு பாசமுடன் இருப்பதை பார்த்த விஜய் குடும்பத்தினருக்கு ஆச்சர்யமாய் இருந்தது.......!

கீதுவுக்கு 2தோழிகளுமே அவளது முகத்தில் இருக்கும் 2கண்கள் மாதிரி எப்போதும் பிரியாமல் இருப்பவர்கள் இந்த ஒரு முறை தான் பிரிந்திருக்கின்றனர் அந்த சமயத்தில் கீதுவுக்கு சம்மந்தமும் நிச்சயம் ஆனது, எங்களுக்கும் கஷ்டமாயிருந்தது..இப்போது இவர்கள் 3பேரையும் சேர்த்து பார்த்த பிறகுதான் நிம்மதியாயிருக்கிறது என்று கீதுவின் பாட்டி தோழிகளின் புராணம் பாடிக்கொண்டிருந்தார்......!

இந்த குடும்பம் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தோழிகள் 3பேரும் வீணடித்து விடாதீர்கள் என்று விஜய் அவர்களை பார்த்து கூறினான்...!

வந்தனாவின் பார்வை அவன் மேல் பட்டது........மன்னிப்பிற்கு ஏங்கும் பார்வையாய் அது இருப்பது விஜய்க்கு புரிந்தது,,,,???????

காலை உணவை முடித்து விட்டு தோழிகளின் ஆசைப்படி அங்குள்ள அவர்களின் பெரிய கரும்புத்தோட்டத்திற்கு அழைத்து செல்லத்தயாரானாள் கீது......... அப்போது வந்தனா மட்டும் "நீங்க முன்னால போங்க நான் வாரேன்" என்று அவர்களை முன் அனுப்பி வைத்தாள்........!

விஜய்,கீது,ரியா மூன்று பேரும் கரும்புத்தோட்டத்தினருகில் அந்த அழகான வளைந்து நெளிந்து பல கிளைகளுடன் கூடிய குட்டையான சிவப்பு பூக்களுடைய அந்த புன்னை மரத்தில் ஏறி அமர்ந்து ரசித்து பேசிக்கொண்டிருந்தனர்..........

அப்பொழுது விஜய் ரியாவிடம் அந்த புகைப்படத்தை எடுத்து காண்பித்தான்....

இது யாருன்னு தெரியுதா?என்றான்...?

என்னங்க நீங்க அதான் எல்லாம் முடிஞ்சிது இல்ல என்று இடையில் புகுந்தாள் கீது.

ஷ்........நீ பேசாதே?உனக்கு இங்கு நடப்பது எதுவும் தெரியாது நீ வேடிக்கை மட்டும் பார் என்றான்...?

அந்த போட்டோவை வாங்கிப்பார்த்த ரியா தெரியாது என்று திருப்பிக்கொடுத்தாள்.

ஹலோ நல்லா பாருங்க என்றான்.

மறுபடியும் பார்த்தவள் இல்லங்க யாருன்னு தெரில என்றாள்.

கீது வாயை பிளந்தாள்.......அடிப்பாவி இது வசந்த் இல்லியா?என்றாள்...?

ஷ்....என்று மறுபடியும் கீதுவை அடக்கினான் விஜய்..!

வந்தனா சொன்ன வசந்த் போட்டோ இதுதான் இவன்தான் வசந்த்ன்னு சொல்றா....ஆனால் நீ.........என்றான்..?

இல்ல... இது வசந்த் இல்ல, வசந்த் இதுதான் என்று தன் செல்போனிலிருந்த வசந்த் போட்டோவை எடுத்துக்காட்டினாள்.

அதைப்பார்த்த கீதுவுக்கு தூக்கி வாரிப்போட்டது தலையே சுற்றியது இவனதான் அந்த ஹோட்டல் வாசலில் பார்த்தோம்.......அதிர்ச்சியில் விஜயை பார்த்தாள்....!

வந்தனாவிடம் இருக்கிற போட்டோ வேற இவன் பெயர் பிரதீக் இவனை எனக்கு நல்லாத்தெரியும் இவனதான் அயோக்கியன் என்று சொன்னேன்......ஆனால் இந்த வசந்த் இருக்கானே.......?????என்று பேசிக்கொண்டிருக்கும் போதே...

ரியாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது யாரென்று பார்ப்பதற்குள் மயங்கி விழுந்தாள்......??????




தொடரும்..........!

எழுதியவர் : ப்ரியா (11-Feb-16, 10:15 am)
பார்வை : 385

மேலே