நினைவு தொடுத்தல்

நினைவு தொடுத்தல்

நீயில்லா நேரம் என்ன
செய்வதென்றே தெரியவில்லை..

இல்லாத வேலையல்லாம்
இருப்பதாய் செய்கிறேன்...

நீவரும் நேரம்வரை
நேரத்தை எட்டிதள்ள...

இன்று பூக்களை
தொடுக்க ஆரம்பிக்கிறேன்..

என்னதிது? ஒவ்வொரு பூக்களும்
உன்னையே காட்டுகின்றன..

உன் நினைவுகள் ...
உன் சீண்டல்கள் ...

கட்டி வைக்கிறேன்..
இந்த பூக்களுடனே...

விரைவில் வந்துவிடு..
பூக்கள் குறைவு..

உன் ஞாபகங்களோ
மிக அதிகம்...

- வைஷ்ணவதேவி

எழுதியவர் : வைஷ்ணவதேவி (13-Feb-16, 1:04 pm)
பார்வை : 1289

மேலே