தயவு செய்து துரோகம் செய்

அட தமிழா...! உன்னைத்தான்
தாழ்மையுடன்
கேட்டுக் கொள்கிறேன்
தயவு செய்து
துரோகம் செய்
அட தமிழா..! உன்னைத்தான்
தாழ்மையுடன்
கேட்டுக் கொள்கிறேன்
சாதிக்கப் பிறந்தவனே
சாதியில் பிறந்ததேன்..?
சாமிக்கப் பெயர் சொல்லி
சாத்திரத்தில் சய்ந்ததேன் ..?
மதுவுக்க மலடு குடித்து
பூமியில் ஒய்ந்ததேன்..?
வளமிக்க மாநிலம் வாழ்ந்தும்
கடனாளி ஆனதேன்..?
படிக்கத் துடித்தவனே
குடிக்கத் துடித்ததேன்..?
ஆரோக்கிய ஆசானே
மீளாப் பிணியில் விழுந்ததேன்..?
தமிழ் மறத்திற்குப் பிறந்தவனே
அறம் மறந்ததேன்..?
இன்னும் இன்னும்
சொல்லிக்கொண்டே போனால் -உன்
பிணத்தின் பின்னும் நான்
சுடுகாடு வரை
வரவேண்டியிருக்கும்
ஏன்..? ஏனென்றுக் கேட்டேனே
ஏனென்று கூற
அரை அறிவாவது இருக்கிறதா ..?
ஆருயிராய் இருப்பவனே
அரை உயிரோடல்லவா வாழ்கிறாய்
விரலுக்கு விலை பேசி
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
விபச்சாரம் செய்பவனே
அட தமிழா..! உன்னைத்தான்
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
மீண்டும் தயவு செய்து
துரோகம் செய்
உன் சாதியில்
இருந்துக்கொண்டே சாதிக்கு
உன் மதத்தில்
இருந்துகொண்டே மதத்திற்கு
உன் கட்சியில்
இருந்துகொண்டே கட்சிக்கு
தயவு செய்து துரோகம் செய்
இதுவரை துரோகிகள் ஆழ
நாட்டைக் கொடுத்த நல்லவனே
இனியாவது
நல்லவன் நாட்டை ஆழ
தயவு செய்து துரோகம் செய்
தமிழனுக்கு அல்ல
தமிழனுக்ககாய் ..!

எழுதியவர் : செ.பா.சிவராசன் (16-Feb-16, 1:12 am)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 103

மேலே