அன்புள்ள அம்மா-1

எங்கே இருக்கிறாய் அம்மா ,
நீ இல்லா என் வாழ்க்கை எதை நோக்கி பயண படுகிறது?
நீ இன்றி என் வெற்றி யாரை அடைய பயணிக்கிறது?
நடை பயிலும் காலத்தில் இடறி நான் விழும் நேரத்தில் கலங்கும் கண்ணீர் துடைத்தவள் நீ
இன்று உன் மடி தேவை தாயே என் விழி நீர் விழும் இடம் அதுவாய் இருக்கட்டுமே....
முதல் வாய் சோறு நீ ஊட்டிய போது நான் அடம் பிடித்தேனா அம்மா...
இன்று அதே அன்பிற்காய் நான் ஏங்குகிறேன் தெரியுமா????
அம்மா என நான் அழைத்த போது நீ அழுது விட்டாய் என்றார் அப்பா
நானும் அழுகிறேன் இன்று நீ இல்லையே என் அருகில்....
நீ விட்டு சென்ற நினைவுகள் போதும் அம்மா நான் உன்னை போல் உருவாக....
ஆனால் அது மட்டும் போதாது அம்மா மகிழ்வோடு நான் உயிர் வாழ....

எழுதியவர் : சந்தியா பிரியா (23-Feb-16, 10:01 am)
பார்வை : 558

மேலே