மர்மத்தின் பக்கம் - தொடர்கதை- பாகம் 2

('மர்மத்தின் பக்கம்- தொடர்கதை- பாகம் 1' தொடர்ச்சி)

டேவிட்டுக்குள் சூனியக்காரி இறங்கிவிட்டாள்.
உலகம் மாட்டிக்கொண்டது.

சற்றே மயக்கமடைந்த டேவிட்டை, ராபர்ட் எழுப்பினான். ஒன்றுமறியாதது போல, டேவிட்,"எனக்கு என்னவாயிற்று?" என்று ராபர்ட்டிடம் கேட்டான்.

ராபர்ட்: அண்ணா, தமக்குள் ஏதோ ஒரு மாற்றம் உள்ளது. இவ்விடம் இருண்ட பிறகு, தாங்கள் மயக்கமடைந்து விட்டீர்கள்.!!!! ஆனால், தாம் எவ்வாறு சிவந்த கண்களைக் கொண்டு வானத்தில் பறந்து, பூமியைப் பிளந்து, மிகுந்த உக்கிரத்துடன் திகழ்ந்தீர்கள்? தம்மைக் கண்டால் எனக்குப் பயமாக இருக்கிறது.

டேவிட்: இல்லை! இல்லை! உனக்குப் பிரம்மை ஏதோ ஏற்பட்டுள்ளது. எனினும், இதனைப் பற்றி அம்மாவிடம் கூறாதே. ஏனெனில், இவ்விவகாரம் தெரிந்தால், பின் நம்மை எங்குமே தனியாக அனுப்ப அஞ்சுவர்.

ராபர்ட்: சரி அண்ணா.

விளையாட்டுக் களிப்பால், மாலையிலேயே தூங்கிவிட்டான் டேவிட்.
டேவிட்டின் கணவில்......
டேவிட், தன் கணவில், அதே மந்திரத்தை மீண்டும் உச்சரித்துத் தன் உடலுக்குள் சூனியக்காரியை வரத் தானே கட்டளையிட்டான்.

அவனது மந்திர வார்த்தைகள் பலித்தது.....

சூனியக்காரியின் ஆட்டம்.....

எனினும் டேவிட்டின் தந்தை ஜார்ஜ் ஒரு Natural Crime Identifier என்பதால், சூனியக்காரிக்குச் சற்று பதற்றமாகத்தான் இருக்கிறது.

சிறிதி நேரம் கழித்து.....

ஏஞ்சலா(ஜார்ஜின் மனைவி): டேவிட், ராபர்ட், இருவரும் உணவருந்த வாருங்கள்.
ராபர்ட்: அம்மா! அண்ணா தூங்கிக்கொண்டிருக்கிறார். விளையாட்டுக்களிப்பால் சீக்கிரம் தூங்கி விட்டார்.
ஏஞ்சலா: ஏன்? வாருங்கள் ஜார்ஜ், சென்று என்னவாயிற்று என்று பார்க்கலாம்.

மாடிக்குச்சென்றால், டேவிட்டின் உடலில் சூனியக்காரி தூங்கிக்கொண்டிருந்தாள். பதினெட்டு நூற்றாண்டுகள் தவம் செய்ததால் களித்துப்போனாள்.

எனினும், டேவிட் என நினைத்துக்கொண்டிருந்த பெற்றோர், அவனை எழுப்ப முயன்றனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், சூனியக்காரிக்கு ஏதும் கேட்கவில்லை. அதனால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாவம், ராபர்ட்டால் உண்மையை மறைக்க முடியவில்லை. உண்மையைத் தன் தந்தையிடம் கூறிவிட்டான்.

கோபமடைந்த தந்தை,"ஏன் இதனை என்னிடம் மறைத்தீர்கள்? இது எவ்வளவு இக்கட்டான விஷயம்."

ராபர்ட்: நான் கூறியிருப்பேன். எனினும், அண்ணா தான், இது தங்களுக்குத் தெரிந்தால், தாங்கள் எங்களைத் தனியாக விடமாட்டீர்கள் என்று தங்களிடம் கூற வேண்டாம் என்றார்.

ஏஞ்சலா: ஜார்ஜ், இனி இவர்களை நாம் தனியாகவே விடக்கூடாது.

ஜார்ஜ்: இல்லை. தனியாக விடக்கூடாது தான். ஆனால், நாமும் அவர்களைத் தனியாக விடுவதுபோல் செய்து, கண்கானித்துக்கொண்டே இருக்க வேண்டும். அஃதாவது, அவர்களை அவர்கள் வழியில் விட வேண்டும்.....
ராபர்ட், அந்தப்பூங்கா எங்குள்ளது? நாம் அங்குச் செல்லலாம் வா!.

அந்தப் பூங்காவில்.....

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (28-Mar-16, 9:06 pm)
பார்வை : 331

மேலே