இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

துன்பங்களை நீக்கி - நல்
புத்துணர்ச்சி தந்தே
மேன்மையை கொண்டது
இனிய துன்முகியாம்..

வேம்முகம் கொண்ட காலத்திலே
வேம்பம்பூ பாயாசமாம் - மஞ்சள்
நீரெடுத்து ஆடுவோமே
பிணியகன்றிட கொண்டாடுவோமே...

நித்திரையின்றி கண்விழித்து
முத்திரையிற்றி கொள்வதல்ல - பந்து
மித்திரரோடு உடன்களித்தே
சித்திரையை கொண்டாடுவோமே ..

அனைவருக்கும் ஆனந்தமாக அமைய
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

- வைஷ்ணவதேவி

எழுதியவர் : வைஷ்ணவதேவி (13-Apr-16, 6:26 pm)
பார்வை : 4623

மேலே