மூர்க்கர்கள் பழமொழி கவிதைகள் - 9 ,பாகம் - 2

கிழிந்து போன முகங்களும்
வலிகள் மறந்துவிடும்
முகத்திரைகள் கிழிந்த
முகங்களின் வலிகள் மாறாது
அடாது செய்தவர்கள்
படாது படுவர் பழமொழி
போலியான நடிப்பில்
புதைந்து போன உண்மைகள்
அடங்காத ஆட்டத்தில்
அதுவாய் புலப்படும்போது
அகத்தின் அழகெல்லாம்
முகம் உரைக்கையில்
மூர்க்கர்களும்,முதலையும்
கொண்டதை விடாமல்
தொடரும் ஆட்டத்தில்
படாத பாடு பட்டே தீருவர்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (18-Apr-16, 7:18 pm)
பார்வை : 304

மேலே