நாய்க்கு ஆசை

ராஜா என்பவர் ஆசை ஆசையாக ஒரு குட்டி நாயை விலைக்கு வாங்கி வளர்த்து வந்தார் ,

அந்த நாயின் நிலையோ பரிதாபம்

அவர் எப்போதும் அந்த நாயை கட்டியேதான் வைத்திருப்பார் ஜாக்கிங் போகும் போதும் கூட நாயை கயிற்றால் கட்டி அதனை இழுத்தே தான் செல்வார் ,,

எப்போதும், தான் உண்டு மிச்சம் கிடந்த உணவைத் தான் நாய்க்கு போடுவான் ,நாய் குறைத்தாலும் அடிப்பான் ,தான் கூப்பிடும் போது குறைக்கா விட்டாலும் நாயை அடிப்பான்


இப்படியாக நாட்கள் சென்றது

ஒரு நாள் இரவு ராஜாவின் வீட்டினுள் திருடன் புகுந்து விட்டான் ,

எப்படியோ கள்ள சாவி போட்டு ராஜாவின் பீரோவை திறந்து நகைகள் பணம் ஆகியவற்றை ஒரு பையினுள் போட்டு வெளியே எடுத்து வரும் போது ராஜாவின் நாய் திருடனை பார்த்து விட்டது

நாய் பையை வாயினுள் கவ்வி இழுத்து கொண்டது திருடன் பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து நாயை எவ்வளவோ அடித்தும் அது பையை விட வில்லை

ஏதோ சத்தம் கேட்டு எழுந்த ராஜா கதவு பீரோ எல்லாம் திறந்திருப்பதையும திருடப்பட்டதையும் உணர்ந்து

வெளியே ஓடி வந்து பார்த்த போது நாய் செத்து கிடந்தது ,திருடன் பையை விட்டுவிட்டு தப்பித்து விட்டான்

ராஜா நாயின் அருகில் இருந்த பையை திறந்து பார்த்து பணமும் நகையும் இருப்பதை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்

அப்பேதும் கூட அவன் நாயை கண்டு கொள்ளவில்லை





இப்படித்தான் நாமும் நாயை வளர்க்கின்றோம் என்ற பெயரில் அதனை சித்திரவதை செய்கிறோம்


முடிந்தால் தெருவோர நாய்களுக்கு உணவும் அந்த நாய்களின் தாகம் போக கொஞ்சம் தண்ணீரும் கொடுங்கள்


பழம் தரும் மரங்களை நடுவோம் சிட்டுக் குருவிகளையும் பறவைகளையும் காப்போம்

எழுதியவர் : விக்னேஷ் (29-Apr-16, 5:37 pm)
Tanglish : naaiku aasai
பார்வை : 487

மேலே