நீள்பயணம்

மௌனங்களின் வானில்
ஒருமையின் விமானப்பயணம்

உணர்வறியா உந்துதலில்
இதுவரை நுழையாத அறைக்குள் நான்

ஒரு பொம்மைக்கு பல குழந்தைகள்
அடித்துக் கொள்கின்றன

பொம்மை பெரிதல்ல என்கிறேன்
பின் எது தான் பெரிதாம்?

முந்திக் கடக்கும் முனைப்பில் விரைகிறேன்

கடந்த பிறகு இதுவும் கடந்து போகும் என்கிறேன்

பின் மற்றொரு பயணம்

பெரியவர்கள் பேச்சை கேள் என்கிறாள் அன்னை

எனக்கு பொம்மை, அவருக்கு பயணம் -
அவ்வளவே வேறுபாடு.
யார் பெரியவர்?
என்றன பிள்ளைகள்

அட, யார் பெரியவர்?

எழுதியவர் : புதுயுகன் (1-May-16, 10:22 pm)
பார்வை : 89

மேலே