மங்கைக்குக் காதல் வந்தால்

மங்கைக்குக் காதல் வந்தது

அவளின் மனம்
ஆனதோ கணம்

அவளின் மானம்
ஏறத் தொடங்கியது வானம்

காதல் அவளை
காட்டில் தள்ளியது

காதல் என்ற சொல்மட்டும்
அவள் காதில் கிள்ளியது

அவள் மனதைப் பற்றியதோ
காதல் எனும் தனியாத தீ

பாவம் எது கொண்டு
தனிப்பாள் அந்த தனி ஒருத்தி

முகத்தைக் காட்டும் கண்ணாடி
அவள் அகத்தைக் காட்டியது

நகத்தை வெட்டும் கத்தரி
அவள் சுகத்தை வெட்டியது

படர்ந்த சமையல் கட்டில்
அவளின் உடல் வெந்தது
அடர்ந்த காட்டில்
அவள் மனம் மிதந்தது

நினைவு வரும்போது
மட்டும் கனவு ஓய்வெடுத்து

குழம்பு வைக்கும்போது கூட
குழம்பியே வைத்தாள்

எழுதியவர் : குமார் (2-May-16, 3:47 pm)
பார்வை : 176

மேலே