சொல்லடி கொஞ்சம்

சொல்லடி கொஞ்சம்
என்றுதான்
கெஞ்சுதடி
இவனுள்ளம்....
செல்லம் என்று
சொல்லி கொஞ்சம்
காதில் கடி.....
இல்லை கோபமென்றால்
கன்னத்தில்
ஒரு அடி.....இது
போதும்
இந்த இம்சைகள்
சுமந்து
இவன் வாழுவேன்.....!!

காணாத பொழுது
சிந்திவிழும்
கண்ணீர்த்
துளிகளில்
உன்விம்பம்
பட்டுத் தெறிக்குதடி.....
சில்லென்ற
காற்றும்
சினம்
கொள்ள வைக்குதடி.....
பக்கத்தில்
நீ இன்றி.....என்
வாழ்க்கையின்
பக்கங்கள்
நிரம்பிவிடுகிறது
வலிகள்
சுமந்த
வலிகளாக.....!!

என்னுள்ளே வந்தவள்
எனக்கின்றிப்
போனால்....போனாலும்
என்றென்றும்
என்னெஞ்சில்
வாழ்வாள்.....வாழ்த்துக்கள்
சொல்லிக்கொண்டே
என்வாழ்க்கையும்
வீழ்ந்து
போகும்.....!!

பால்நிலவின்
ஒளியில்
பல கதைகள்
தூதுவிட்டோம்....
ஏனோ
முடிவில்
இருண்டே போனது
வானம்.....!!

எழுதியவர் : thampu (5-May-16, 4:37 am)
Tanglish : solladi konjam
பார்வை : 184

மேலே