விடியல் எப்போ பிறக்குமடா

குழந்தை தொழிலாளி.

பட்டாம்பூச்சி
பிடித்த கை இப்போ கலவை
பானல் தூக்கியதே,

பிஞ்சிமனசு
பித்தாச்சு
பிள்ளைங்க மனசு
கல்லாச்சு

கலகலப்புடன் வாழாமல் கல்லு இங்கே சுமக்குதடா

மூணூ வயசு ஆகலையே
மூட்ட இங்கு தூக்குதடா
வெகுளி மனசு கொண்ட
குழந்தை
வெயிலுல உழச்சி வேகுதடா
வெளிச்சம் ஒன்று
வருமா என்று
இருட்டில் வாழ்ந்து நோகுதடா,
புத்தக மூட்ட சுமக்கும் வயதில்
புளியங்கா முட்ட சுமக்குதடா

இல்லாமை எப்போது நீங்குமடா?
இவர் வாழ்வில் எப்போது விடியல்
பிறக்குமடா?

எழுதியவர் : கவிபிரவீன்குமார் @ (5-May-16, 1:41 pm)
பார்வை : 177

மேலே