புதியதோர் உலகம் செய்வோம்

கைகள் ஒன்றாய் சேர்த்து
மரங்கள் நன்றாய் நட்டு
மண்ணின் வளத்தைப் பெருக்க.
புதியதோர் உலகம் செய்வோம்.

நன்றாய் மண்ணில் பிறந்தோம்,
அழகாய் தினமும் படித்தோம்,
வேலை வேலையென்று வெளிநாட்டிற்கு
வேகமாய் பறந்தோம்,

உலகில் இந்தியா உயர்த்திட
நம் நாட்டில் உழைத்திடு திறம்பட
புதுமையோடு புரட்சி செய்து
புதியதோர் உலகம் செய்வோம்,

கலாம் கண்ட
கனவுகளை
கரைபடியாமலும்
காலத்தால்
கரைந்து செல்லாமலும் - அவரின்
கனவினை நிறைவேற்ற
கனவின் லட்சியத்தோடு
புதியதோர் உலகம் செய்வோம்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (5-May-16, 1:55 pm)
பார்வை : 160

மேலே