அன்பே அழுகிறேன்

இது நான் எழுதிய முதல் பாடல் வரிகள் ஒரு சிறு முயற்சி..
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் தோழமைகளே...



அன்பே அழுகிறேன்..
அன்பே அழுகிறேன்..
கண்ணீரில் முழ்கினேன்..
கானல் நீராய் கரைகிறேன்..
என்னை நீ விட்டு சென்றதாலே..

உடன் பிறப்பென நினைத்து..
உயிரையும் கொடுத்தேன்..
உயிரை எடுத்துக் கொண்டு..
உயிரற்ற பிணமாய் அலைய வைத்தாய்..

என் அன்பில் என்ன குறை கண்டாய்...
என்னை விட்டு நீ சென்றாய்..

அன்பே அழுகிறேன்..
அன்பே அழுகிறேன்..
கண்ணீரில் முழ்கினேன்..
கானல் நீராய் கரைகிறேன்..
என்னை நீ விட்டு சென்றதாலே..

காரணமின்றி விட்டு செல்ல..
நம் உறவு நட்பும் அல்ல காதலும் அல்ல..
காரணத்தோடு தான் விட்டு செல்கிறாய்..
காரணத்தை என்னிடம் சொல்ல மறுக்கிறாய்..
சிறு குழந்தை போல் நானும் அழுகிறேன்..

ஏன் உன்னில் இந்த திடீர் மாற்றம்..
என் உறவு உனக்கு பிடிக்கலயா.. -அல்லது
என் உறவில் உனக்கு நம்பிக்கை இல்லையா..
கண்ணீர் துளிகளுடன் என் காலங்கள் நகர்கிறது..

என் அன்பில் என்ன குறை கண்டாய்...
என்னை விட்டு நீ சென்றாய்..

என் அன்பு புரியலயா..
புரிந்தும் புரியாமல் நடிக்கிறயா..
என்னை நீ வெறுத்தாலும்..
உன்னை நான் வெறுக்க போவதில்லை..
என் உயிர் உள்ள வரை என்னுள் நீ இருப்பாய்..

அன்பே அழுகிறேன்..
அன்பே அழுகிறேன்..
கண்ணீரில் முழ்கினேன்..
கானல் நீராய் கரைகிறேன்..
என்னை நீ விட்டு சென்றதாலே..


-ஆ.மு.ராஜா

எழுதியவர் : ஆ.மு.ராஜா (5-May-16, 2:10 pm)
Tanglish : annpae alugiraen
பார்வை : 489

மேலே