இவள் என் தோழி
இரவை ஒளியாக்கும் நிலவோ இவள்
மண்ணை மணமாக்கும்
மழையோ இவள்
வருடத்தை நகர்த்தும்
நேரமோ இவள்
உயிரை உருகவைக்கும்
அன்போ இவள்
நெஞ்சின் வழியே
கண்ணீர் வழிகிறதே
உன் கண்ணில் நான்
என் கண்ணில் நீ
நட்பின் வழியில்
நாம் சேரும் பொழுதினிலே
மறந்திடுவோம்
உலகத்தை
ஆளப்பிறந்திருக்கும்
புது வெள்ளம்
நாங்கள் தான்
கண்ணீரை நிறுத்தி விட்டு
சுற்றிடுவோம் புது உலகை
கணினியை படித்த நாங்கள்
நினைவகத்தை தேடுவதே இல்லை
எல்லாம் நேராக இதயத்திற்கு சென்றுவிடும்
நாங்கள் அழிந்தாலும்
இதயத்தில்
நினைவக நட்பு
பல சந்ததிகள் கடந்து
பல ஜென்மங்கள் கலந்து வாழும் உயிரில்
~ பிரபாவதி வீரமுத்து