இன்னொரு சுனாமியாக
மேகம்தான் நான்
கறுப்புக் கொடி காட்டினேன்..
மழைதான் நான்
கண்ணீர் விட்டுக் கதறினேன்...
காற்றுதான் நான்
வேலை நிறுத்தம் செய்தேன்...
புயல்தான் நான்
மையம் கொண்டேன்
மின்சாரம்தான் நான்
கோபப்பட்டு பட்டுத் திரும்பினேன்...
பணநாயகத்தால் தேர்தலில்
ஜனநாயகம் இல்லை என்பதற்காக
இயற்கைதான் நான்
இனி உருவாக வேண்டும்
இன்னொரு சுனாமியாக
மனிதர்களே உங்களை
அழிப்பதற்காக அல்ல
பணநாயகம் செய்யும்
ராஜா ராணிக்களை
புதைப்பதற்காக..!