நம்பிக்கையின் வலிமை
கோவிலை விட்டு வெளியே வந்த பக்தனைப் பார்த்து, ”உன் தியானம் மற்றும் பிரார்த்தனை மூலம் எதை அடைந்தாய்” என்றான் ஒரு நாத்திகன் கிண்டலுடன்.
” என் தியானம் மற்றும் பிரார்த்தனை மூலம் நான் எதையும் அடையவில்லை. ஆனால் கோவம், பொறாமை, சூது, காழ்ப்புணர்ச்சி, சகிப்பிண்மை ஆகியவற்றை இழந்தேன்” என்றான் அந்த ஆத்திகன்.
(கோவிலுக்கு செல்வது என்பது கடவுளிடம் சிலவற்றை கேட்டுப்பெற வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல. சிலவற்றை இழப்பதற்கும் செல்லலாம்)