நான் சுவாசிக்கும் காற்று உன் நினைவுதாண்டி 555

என்னுயிரே...

உன் வீட்டில் உனக்கு மணம்பேசி
முடித்துவிட்டார்கள் என்று சொல்கிறாய்...

கேட்ட என் செவிகள்
செவிடானாலும்...

நீ சொன்ன பதில்தானடி
என்னை கொன்றது...

என்னை எப்போதும் தழுவும்
உன் கைகள்...

என்னோடு நடைபோட்ட
உன் கால்கள்...

நான் மட்டும் இருக்கிறேன் என்று
சொன்ன உன் இதயம்...

என்னை முழுவதும்
மறந்துவிடுமா...

என்னையும் சிலர்
நேசிக்க இருந்தாலும்...

நான் உன்னை மட்டும்தானடி
நேசித்தேன்...

என்றோ நாம் ஒன்றாக ரசித்த
நிலவை சொல்கிறாய்...

நான் நிலவை பார்க்கும்
போதெல்லாம்...

உன் நினைவுகள்
எனக்கு வரும் என்று...

நான் சுவாசிக்கும் காற்று
உன் நினைவுதாண்டி...

இனி நீ உணர்ந்தும்
பயனில்லை...

முடிந்தால் நான் வருகிறேன்
உன் திருமணத்திற்கு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (24-May-16, 8:25 pm)
பார்வை : 634

மேலே