கண் பார்த்த நாள் முதல்

உயிரே உருகுதே
உன்னைப் பார்த்த நாள் முதலே
உலகம் சுருங்குதே
உன் விழிப் பார்வையிலே......


பசும் பாலில் நனைந்த தேகமாய்
இளம் மேனி வாசம் வீசுதே...
பட்டைத் தீட்டிய வைரம் போல்
உன் பெண்மை என்னைக் கொள்ளுதே......

உயிரே உருகுதே......

பூட்டி வைத்த வீட்டுக்குள்ளே
புகுந்து கொண்ட எலி போல
உள் இதயம் நீ குடைய
வலி அறியாத சுகம் உணர்ந்தேன்......


தட்டுத் தடுமாறி தீயில் விழுந்தாலும்
விட்டு இடமாறி மழைப் பொழிந்தாலும்
உன் அன்புச் சாரலில்
என் தேகம் முழுதும் நனைந்தேன்......


எங்கே எங்கே மின்மினி பூச்சியென்று
தேடித்தேடி நானும் அலைந்தேன்...
உன் வதனம் வந்ததும் முகில் கூட்டமாய்
மின்மினிகள் உன்னைச் சூழ்ந்திடக் கண்டேன்......

உயிரே உருகுதே......

நீராடிய நீளக் குழலின்
நீரிலே நானும் நனைந்து
அந்த ஈரக் குழலின் சாரல் காற்றில்
தூக்கம் கலைந்து கனவென்று எழுந்தேன்......


குத்தி வைத்த நெல் மணியாய்
என் மனசு உரலில் கிடக்க
கொத்தி திண்ணும் பறவை உன்னோடு
இந்த உசுரை ஒன்றாய் இணைத்தேன்......


மார்கழி திங்கள் பனியாய்
அருகம் புல்லின் மீது நீயுறங்க
கதிர் வர தேகம் நோகுமென
பூவிதழாக என் இதயம் விரித்தேனே......

உயிரே உருகுதே......

எழுதியவர் : இதயம் விஜய் (25-May-16, 7:49 pm)
பார்வை : 407

மேலே