எண்ணத்தில் துளிர்த்தவை 11

​வந்தவரெல்லாம் வரமாட்டார்
வந்தவழியையும் மறந்திருப்பார்
வேட்பாளர்கள் !

நினைவிலிருக்கும் சிலகாலம்
நீரில்எழுதின எழுத்துக்களாகும்
வாக்குறுதிகள் !

அள்ளித்தெளித்த மாக்கோலம்
ஆடிக்காற்றில் அலங்கோலமாகும்
​தேர்தல் அறிக்கை !

அழகாய்தெரியும் ஆடைகளும்
கிழிந்திடும்நிலை உருவாகும்
புதிய அரசாங்கம் !​

​வெளியேவந்த கரையான்கள்
புற்றுக்கேத் திரும்பிவிட்டன !
கரன்சிகள் !

எதிரேதெரிந்த மாற்றங்கள்
​எட்டும்நிலையில் மறைந்தது !
தேர்தல் முடிவுகள் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-May-16, 8:46 am)
பார்வை : 700

மேலே