இரவின் அழகு--முஹம்மத் ஸர்பான்

அந்திக் கன்னியோ!
கருமை நிறச்சேலை புனைந்திட
விண்ணெல்லாம் விண்மீன்கள்
நிலாவை உலா வருகின்றன...,

பொய்கையை வழித்தெடுத்து
வீசும் தென்றல் -மலரிடம்
காதல் சொல்லும் பூக்காம்பு..,
தூங்காத காதலர்களின்
நேசக் கவிதைக்கு -நிலா காகிதம்,
இருள் தூரிகை..,

ஈன்றெடுத்த அம்மா பிள்ளையை
பாசயலையில் தூங்காது கண்
விழித்து காப்பாள் -ஒருநாள் வாழும்
மின்மினிபூச்சிகளுக்கு இந்த
இரவு தான் உயிர் நிலைக்கும் ஜென்மம்

நந்தவன பச்சைக்கிளி
காதல் கொண்டு கீச்சிடும்.
காட்டுமூங்கில் புல்லாங்குழலால்
பாணன் வாசிக்கும் நள்ளிரவு இசைக்கு
நிலா சுதி..,விண்மீன் சரணம்
குளிர் பல்லவி..,இருள் அழகு..!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (29-May-16, 9:25 am)
பார்வை : 311

மேலே