மண்ட ஓடு மாதிரி•••

உதடு:
ஏண்டா மகட்ட, முண்டம் உன்னோட வருங்கால மனைவி ஊருக்கு போறா
மூச்சிக்கு முப்பது தரம் உன்னைய திரும்பி
திரும்பி பாக்குறாளே அப்படிக்கா போயி மரத்துக்கு மறைவா வரச்சொல்லி அணைச்சி புடுச்சி ஒரு உம்மா கொடுத்தா என்ன•••!

மனம்:
ஐயோ நாமாட்டேன் அந்த மரத்தயே மேலே சாச்சி கொண்டேபுடுவா உதடே கொஞ்சம் கம்முன்னு இரு இழுத்து புடிச்சி அறுத்திடுவேன்

உதடு:
அடே நீ என்னைய அறுத்தா நீ மனுஷனா இருக்க மாட்டே

மனம்:
என்னவாக ஆயிடுவேன்

உதடு:
மண்ட ஓடு மாதிரி ஆயிடுவே, இன்பத்திலேயும் சிரிச்சா மாதிரியே இருப்பே, துன்பத்திலேயும் சிரிச்சா மாதிரியே இருப்பே பரவாயில்லையா•••! இன்னொன்னு தெரியுமா இப்படியை நீ எங்கேயாச்சும் சாவு வீட்டுக்கு போனேன்னு வச்சிக்கோ நோண்டி நொங்க எடுத்துடுவாங்கடீ••!

மனம்; ••••••••••!

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி மும (8-Jun-16, 3:23 pm)
பார்வை : 128

மேலே