வாராயோ வெண்ணிலவே

அந்தி வரும் வேளையிலே
வாடைக் காற்று வீசயிலே
வானத்திலே விழிகள் தேடுதடி
வாசலில் நெஞ்சம் இன்று வாடுதடி......

அந்தி வரும் வேளையிலே......

பொய்கையின் நீரெல்லாம்
அல்லி மடல் சுமக்கயிலே
இதழோட இதழ் முடிந்து
இன்னும் முகம் திறக்கவில்லை......


முகிலை கிழித்து விட்டால்
முழு நிலவு வெளியில் வரும்
மூன்றே நொடிப் பொழுதில்
முடிந்தப் பூக்கள் மலர்ந்து விடும்......

அந்தி வரும் வேளையிலே......

பூமியிலே உயிர்களுக்கு
இருளை விலக வைத்தால்
இரும்பு வலை எடுத்து
உன்னை சிறை செய்வாரோ?......


வெயிலின் கோபத்திற்கு
குளிர் தாகம் தீர்த்தால்
அமிழ்தமாய் உன்னை அள்ளி
ஆசைத்தீர குடிப்பாரோ?......

அந்தி வரும் வேளையிலே......

எழுதியவர் : இதயம் விஜய் (25-Jun-16, 7:48 am)
Tanglish : vaaraayo vennilave
பார்வை : 912

மேலே