காவியதாசன் கண்ணதாசன் --- தரவுக் கொச்சகக் கலிப்பா

காவியத்தில் கண்ணதாசன் கருத்தோங்கும் வண்ணதாசன்
பாவியற்றும் பாவலன்பார் பாரினிலே அற்புதம்பார் .
காவியங்கள் படைத்திடவே காசினியில் தோன்றிட்டான்.
சேவித்தும் ஏற்றிடுவோம் செம்மைமிகுப் பாக்களினை.


அற்புதமான படைப்பாளி அகிலத்திற்கோர் சான்றாகிப்
பொற்புடையக் கவிதைகளால் பொன்றாத இடந்தன்னைக்
கற்றவர்கள் சபைதனிலே காலமெல்லாம் இடம்பெறவே
உற்றவர்கள் முன்னிலையில் உன்னதமாய் நின்றிடுவான் .


கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றுவிடும் .
விண்ணுலகும் இவன்புகழை விதந்தோதி வாழ்த்துரைக்கும் .
மண்ணுலகில் பிறந்தாலும் மகேசனாம் எந்நாளும்
பண்ணதனில் போற்றிடுவோம் பக்குவத்தின் பேராளன் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Jun-16, 4:59 pm)
பார்வை : 89

மேலே