அன்பும் ஆதரவும் இருந்தால்

அன்பும் ஆதரவும் இருந்தால்

அலைந்து திரியும் மனது
அமைதி அடைவதில்லை
கருவிழி இல்லா கண்கள்
காட்சிகள் காண்பதில்லை
பாதை தெரியாத கால்கள்
பயணம் முடிப்பதில்லை
கடலில் சிக்கிய படகுகள்
கரை சேருவதில்லை
ஆழ்மனதில் உள்ள வடுக்கள்
வாழ்க்கை முழுதும் அழிவதில்லை
அன்பு அறியாத குழந்தைகள்
பண்புடன் வளர்வதில்லை
அன்புடன் அரவணைத்து ஆதரித்தால்
அழகாக வளர்வது பூக்கள் மட்டுமல்ல
அருமையான பிள்ளைகளும் கூட தான் ...

எழுதியவர் : கே என் ராம் (25-Jun-16, 11:40 pm)
பார்வை : 77

மேலே