இழிச் சொல்லின்றி•••

கனிகளாய்
கனிவதெல்லாம்
எச்சமாகத்தான் !
இலைகளாய் விடுவதெல்லாம்
பிழுக்கை யாகத்தான் !
புற்களாய் விளைவதெல்லாம்
சாணமாகத்தான் !

பெண்களாய் பிறப்வரெல்லாம்
அடைக்கலம் தேடிக்கத்தான் !

ஆண் துணையின்றி
வாழ்ந்து காட்டுவேன்
பெண்கள் கூறலாம் !

பெண் துணையின்றி
வாழ்ந்து காட்டுவேன்
ஆண்கள் கூறலாம் !

இழிச் சொல்லின்றி
வாழ்ந்துக் காட்டிட
இருவராலும் இயலுமா !

கிழக்கில் உதிப்பவன்
மேற்கில் உதித்தாலும் !
நடக்கின்ற காரியமே
இல்லவே இல்லையன்றோ !

வீம்பிற்காய் கத்தியை
விழுங்கிக் காட்டிடு
வாயெனில் !
தொண்டைக் கிழியுமோ ! இல்லை
மண்டையை போடுமோ
யாரறிவார் !

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி மும (26-Jun-16, 6:20 pm)
பார்வை : 171

மேலே