நினைவுகள்

எத்தனை தடவைதான் அழித்துவிட நினைத்தாலும் என்னை ஓடவிட்டு துரத்தும் உன் நினைவுகளை தாண்டி ஓரடி கூட நகர முடியவில்லையே......
எப்படி நீ மட்டும் அத்தனை சுலபமாய் கடத்திவிட்டு சென்றாய்?இதயமே இல்லாதவனிடம் இரக்கத்தை எதிர்பார்ப்பதே அதிகம் ....இதில் காதல் எங்கணம்!
சரி ..விடு ....நான் உன்னை கடந்த போது உணர்ந்த காதலை ....
நீயும் ஒருநாள் எவரையேனும் கடக்கும் போது உணர்ந்து கொள்வாய்...
அதுவரை என் எல்லாமும் நடிப்பாய்....
நாடகமாய்.....
இன்னும் ஏதோவொன்றாய் ...
உன்னுள் உருவகப்படுத்தப்பட்டபடி இருக்கட்டும்....

எழுதியவர் : shanju (29-Jun-16, 2:52 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 407

மேலே