இரட்டைக் கனிகள்

தன் கருவறையை
நம் இருவருக்காக பகிர்ந்து கொடுத்தவள்...
நாம் இருவரும் இப்பூவுலகைக்
காண்பதற்காக போராடியவள்...
இரு உயிர்களையும் பேணக்கூடிய
சக்தி உன்னிடம் இல்லை
என்னும் அயலாரின் வார்த்தைகளை
உதாசீனப்படுத்தியவள்
இறைவன் எனக்கு அளித்த
"இரட்டைக் கனிகள்" என
பெருமகிழ்ச்சி அடைந்தவள்...
நம்மிருவரையும் கண்டு
புறத்தார் குழம்பிநிற்கும் தருணத்தில்
எளிதாக நம்மை
அடையாளம் காணுபவள்...
உயிரணுவாக உருவான
நம்மிருவரில்,
இவ்வுலகை முதலில்
கண்ட பெருமையை
நான் அடைந்ததால்
"முதல் கனி". என்று என்னையும்,
" இரண்டாம் கனி" என்று உன்னையும்
அன்போடு விமர்சித்து
இதழ் குவித்து புன்சிரிப்பவள்.
**அம்மா**

எழுதியவர் : மு.முருகேஸ் (6-Jul-16, 2:37 pm)
பார்வை : 210

மேலே