மாலைப் பொழுது

இவரா..
அவரா..
இந்த அம்மாவா..
அந்த அம்மாவா..
யார் நம்மை கூட்டிப் போகப்போகிறார்கள்
தத்தெடுத்துக் கொண்டு..
என்று எல்லா சிறுவர்களும் ..
வந்தவர்களை பார்க்க
அப்புறம் ஒரு நாள் வருகிறோம் என்று
அவர்கள் எல்லோருமே
போய்விட்ட அந்த மாலைப் பொழுது
மட்டும் ..
மறக்க முடியாததாகி விடுகிறது
அந்த சிறுவர்கள் அனைவருக்கும்!

எழுதியவர் : கருணா (6-Jul-16, 2:59 pm)
Tanglish : maalaip pozhuthu
பார்வை : 166

மேலே