ஆண்டவனே சாட்சி••
தாய் நானிருக்கும் போது மகனே உனக்கென்ன மனக்கவலை !
மகனாக நீ இருக்கும் போது மகனே எனக்கில்லை ஒருக்கவலை !
தும்பிக்கையற்ற யானை
தன்பசித்தீர க்கூடுமா !
நம்பிக்கையில்லா நீயும்
வாழ்ந்திட க்கூடுமா !
சின்னஞ்சிறு உலகத்திலே
சின்னஞ்சிறு சோதனைக்கே
சோர்ந்து விடலாமா !
நேரும் சின்னஞ்சிறு வேதனைக்கே
நீயும் வாடிவிடலாமா மகனே !
துன்பம் எதுவாயினும் எதிர்கொள் இன்பத்திற்கு மறந்தும் மயங்காதிரு !
ஒரு சுவாரசியம் உருவாகிடும் உன்
வாழப்போகும் வாழ்க்கையிலே !
சூறாவளி எனும் விளை யாட்டை இயற்கை விளையாடி காட்டும் போது !
புயல் எனும் விளையாட்டை திரை கடல் விளையாடி காட்டும் போது !
பூகம்பம் எனும் விளையாட்டை பூ
மாதேவி விளயாடி காட்டும் போது !
சுட்டெரிக்கும் விளையாட்டை தீ
விளையாடிக் காட்டிடும் போது !
ஜீவராசிகள் தான் மாய்கின்றது அதற்கு ஆகாயமே சாட்ச்சி !
இவ்வணைத்திற்கும் அந்த ஒரு ஆதிமூலன் ஆண்டவனே சாட்சி !