ஆண்டவனே சாட்சி••

தாய் நானிருக்கும் போது மகனே உனக்கென்ன மனக்கவலை !

மகனாக நீ இருக்கும் போது மகனே எனக்கில்லை ஒருக்கவலை !

தும்பிக்கையற்ற யானை
தன்பசித்தீர க்கூடுமா !

நம்பிக்கையில்லா நீயும்
வாழ்ந்திட க்கூடுமா !

சின்னஞ்சிறு உலகத்திலே
சின்னஞ்சிறு சோதனைக்கே
சோர்ந்து விடலாமா !

நேரும் சின்னஞ்சிறு வேதனைக்கே
நீயும் வாடிவிடலாமா மகனே !

துன்பம் எதுவாயினும் எதிர்கொள் இன்பத்திற்கு மறந்தும் மயங்காதிரு !

ஒரு சுவாரசியம் உருவாகிடும் உன்
வாழப்போகும் வாழ்க்கையிலே !

சூறாவளி எனும் விளை யாட்டை இயற்கை விளையாடி காட்டும் போது !

புயல் எனும் விளையாட்டை திரை கடல் விளையாடி காட்டும் போது !

பூகம்பம் எனும் விளையாட்டை பூ
மாதேவி விளயாடி காட்டும் போது !

சுட்டெரிக்கும் விளையாட்டை தீ
விளையாடிக் காட்டிடும் போது !

ஜீவராசிகள் தான் மாய்கின்றது அதற்கு ஆகாயமே சாட்ச்சி !

இவ்வணைத்திற்கும் அந்த ஒரு ஆதிமூலன் ஆண்டவனே சாட்சி !

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (18-Jul-16, 12:21 am)
பார்வை : 88

மேலே