அடைக்கலம் நீயே•••

ஆயிரம் கோள்கள்
பிறந்து வந்தாலும்
ஆகாயம் ஒன்று தான் !

ஆயிரம் மதங்கள்
பிறந்து வந்தாலும்
ஆண்டவன் ஒருவனே !

ஆயிரம் சாதிகள்
பிறந்து வந்தாலும்
ஆண்பெண் இரண்டே !

ஆயிரம் ஆடவர்
அணி திரண்டாலும்
ஒருத்திக்கு ஒருவனே !

ஆயிரம் பேர்க்கூடி
அறிவுரை கூறிடினும்
அடைக்கலம் நீயே
ஆண்டவனே நீயே !

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (18-Jul-16, 12:24 am)
பார்வை : 122

மேலே