யார் முட்டாள்
குட்டையில் சிறு கல் போட்டான் ஒருவன்
வட்டமாய் அலைகள் வரிசையாய் தோன்றின
சட்டென அலைகள் சமாதியில் மறைய
பட்டென குட்டையில் பாய்ந்தன கொசுக்கள்
பத்தோடு பத்தாக அத்தோடு நில்லாமல்
பொத்தென்று கற்கள் போட்ட வண்ணமிருந்தான்
இத்தோடு விட்டால் இவன் தொல்லை தாளாதென
கொத்தாக கொசுக்கள் குடித்தன அவன் குருதியை
சமூகத்திடம் ஒரு கேள்வி...
அலையாது நிற்கும் குட்டையை அசைத்து
அயராது கடிக்கும் கொசுவை துரத்தும்
அவன் முட்டாளா?
இல்லை
அசையாது நிற்கும் குட்டை"நீர்" முட்டாளா?