வனமும் வாழ்வும்

குயில் பாடும் பாட்டு
காற்றில் நானும் கேட்டேன்
ஆடும் மயிலைப் பார்த்து
நானும் ஆட்டம் போட்டேன்
அருவி நீரைத் தெளித்து
சின்னக் குளியல் போட்டேன்
காட்டு யானை மீது
நானும் ஏறிச் சென்றேன்
நாட்டு வாழ்வைப் பார்க்கையில்
வனமும் வாழ்வும் அருமையே......!

- செ.கிரி பாரதி

எழுதியவர் : செ.கிரி பாரதி (22-Jul-16, 5:20 pm)
பார்வை : 1092

மேலே