ஏமாற்றம் தந்தவள்

என் இறுதி ஊர்வலத்தில்
பூக்களை கொஞ்சம் அதிகமாக
தூவி வையுங்கள்
அந்த அஞ்சலி
எனக்கு நிச்சயம்
செலுத்த வருவாள் அஞ்சலி
அவள் பாதங்கள் நோகாமலிருக்க,,

அவள் எதிரே எந்த இளைஞனையும்
வரச்சொல்லாதீர்
அவன் என்னோடு வராமலிருக்க,,

நான் தொட்ட பூக்களை
வாங்கமறுத்தவளை
எனைத்தொட்ட பூக்களாவது
தாங்கட்டும்
அவளின் பட்டுப் பாதம்
பட்டாவது அதன் மொட்டு உடல்
தூங்கட்டும்

அறுவை சிகிச்சை செய்து
எடுக்கவேண்டிய
என் இதயத்தை

அழகுச் சிகிச்சை மூலம்
அறுவடை செய்துவிட்டாள்
கரு விழிக் கண்ணால்
கொய்துவிட்டாள்

எழுதியவர் : குமார் (22-Jul-16, 7:15 pm)
பார்வை : 761

மேலே