காலம் எல்லாம் காத்திருப்பேன்

கண்ணே - அழகு
பெண்ணே - உன்
கண்பார்வை பட்டால்
கார்இருளும்
மறைந்துவிடும் - உன்
வட்டமுக அழகை பார்த்து
வான்நிலவும்
வெட்கம் கொள்ளும்
காலை நேர
கதிரவன் கூட - உன்
கட்டழகு மேனியை
கண்டு கவிதை பேசும்
உன் மீது படுவதால்
என்னவோ...?
சுடுகின்ற வெயில் கூட
சுகமையாய் இருக்குதடி
வஞ்சமில்லா மனதை
வளமையாய் கொண்டவளே
கள்ளமில்லா என் மனதை
கலராக்கினாய்,
எழுத்தெரியாத என்னை
கவிஞனாக்கினாய்,
உன்னை கண்ட நாள் முதல்
உலகம் மறந்தேன்,
உலகம் நீதான் என
பார்த்து வியந்தேன் - உன்
கண்இமை
அசைத்தால் போதும்
காலமெல்லாம்
காத்திருப்பேன் பெண்ணே.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (22-Jul-16, 8:06 pm)
பார்வை : 535

மேலே