கண்ணீர் துளி சொன்னது

அன்பே....
இமைக்க மறந்தாலும் - உன்னை
நினைக்க மறந்ததில்லை
சுவாசிக்க மறந்தாலும் - உன்னை
நேசிக்க மறந்ததில்லை
காற்றுக்கு உருவமில்லை - உன்
காதலுக்கு உண்மை இல்லை
கண்மூடித்தனமாக காதலித்துவிட்டேன்
கைவிட்டு செலும் போது
கண்ணீர்த்துளி மட்டும்
ஆறுதல் சொன்னது
உன்னோடு என்றும் நான் இருப்பேன்
அவள் செய்ததை நீ செய்யாதே
என்னை பிரிந்து விடாதே.........!

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (24-Jul-16, 9:49 pm)
பார்வை : 1521

மேலே