ஏனென்றால்

கவிதைகள் கிறுக்கியதில்லை உன் கண்கள் காணும் வரை;

தேன் ஒழுகும் பூக்கள் கண்டதில்லை உன் இதழ்கள் பார்க்கும் வரை;

குயிலுக்கு செவிகொடுத்தவன் நானில்லை உன் குரல் கேட்கும் வரை;

கருமையை சிறிதும் ரசித்ததில்லை கார்கூந்தல் காணும் வரை;

அன்னம் கண்டு சொக்கியதில்லை உன் நடை காணும் வரை;

மல்லிக்கொடி கண்டு மயங்கியதில்லை உன் இடை காணும் வரை;

பிக்காஸோ பரிட்சயமில்லை உன் நிழல் காணும் வரை;

ராஜாவை சற்றும் வியந்ததில்லை உன் வளையோசை கேட்கும் வரை;

ஏனென்றால் காரணம் நீயானாய், உன்னாலே காதலன் நானானேன் !!!!!!!!!!!!!!

எழுதியவர் : தமிழ்த்தாகம் (25-Jul-16, 7:47 am)
Tanglish : yeenendraal
பார்வை : 93

மேலே