கனவில் வந்த காதலி

என் கனவில் உன் முகம்
இன்று மலர்ந்ததே...
இரு விழிகளின் வழியில்
வசந்தம் பிறந்ததே......


துள்ளி விழும் அருவிகளாய்
தூங்காது நெஞ்சம் கானம் பாடுது...
அள்ளி முடிந்த உன் குழலில்
தூங்கவே கனமும் வாடுது......


கண் இமைக்கும் நொடியினில்
பெண்ணினத்தில் எனை மயக்கியத் தேவியே...
உன் முல்லைக் கொடி இடையிலே
வில்லாய் நானும் வளைந்தேனே......


இரும்பு இதயம் உன்னில் சிக்கி
கரும்புச் சாராய் உருகுதே...
என் கனவில் உன் முகம்
இன்று மலர்ந்ததே......


வானவில் வந்திங்கு சிணுங்குதே
உன் கைவளையல் ஓசையிலே...
மெட்டுக் கேட்டு பூமி உறங்குதே
கால் கொலுசின் இசையிலே......


மான் விழியே மங்காத ஒளியே...
செந்தமிழே செங்கனி இதழே...
செவ்வாய் கிரகத்தில் துளிர்த்தாயோ?...
செந்தளிர் மேனியில் எனை வென்றாயே......


உனைப் பற்றி ஆயிரம் வரிகள்
முடியவில்லை ஓர் வரிகளும்...
என் கனவில் உன் முகம்
இன்று மலர்ந்ததே......


இரு காம்புகள் மண்ணில் ஊன்றி
மிதந்து வரும் மதி மலரே...
பாவை காயும் பாவை நீ தொட்டு
நான் கடித்தால் பஞ்சாமிர்தச் சுவையே......


புன்னகை தேசத்து இளவரசியே...
உணர்வுகளால் எனை உரசி
உலை அரிசியாய் கொதிக்க விட்டு
உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டாயே......


மேகம் தந்த மழைமகளே உன்னாலே
மோகத் தாகம் கூடுதே...
என் கனவில் உன் முகம்
இன்று மலர்ந்ததே......

எழுதியவர் : இதயம் விஜய் (25-Jul-16, 8:15 am)
பார்வை : 358

மேலே