வேண்டாமே

புன்னகை வழியும் உதடுகளில்
புகையிலை சுருட்டை வைப்பது ஏன் ?
அரைகுரையானா இன்பத்திற்கு
ஆயுள் தண்டனை வேண்டுமா உனக்கு ?
புவியை ஆளும் சக்தி கொண்ட - நீ
புற்றுநோய் வந்து வீழ்வாய்யடா !
வெளிநாட்டவர்களின் அறிமுகத்தால்
வெள்ளந்தி உயிர்கள் போகுதடா !
புத்தகம் சுமக்கும் கையில் கூட
புகையிலை சுருட்டை கண்டேனடா !
புத்தர் சொன்ன போதனைஎல்லாம்
எங்கே மறைந்தது போனதடா !
இளமை துள்ளும் வயதினிலே - நீ
இதற்க்கு அடிமை ஆனது ஏன்?
கனவு கண்ட வாழ்க்கையெல்லாம் பாதியில்
கலைந்து போகுமடா !
மரணம் தரும் புகையிலையை
மண்ணொடு புதைத்துவிடு
மனம் மகிழோவோடு வாழ்ந்திடு..!

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (25-Jul-16, 9:13 pm)
Tanglish : vendaamey
பார்வை : 495

மேலே